Saturday 3 September 2016

வணக்கம் நண்பர்களே,

அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.

அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.

இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.

மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.

அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.



அன்புடன் வெங்கட்

Tuesday 13 October 2015

நவராத்ரி பதிவு 1 (மீள் பதிவு)

இது ஒரு மீள் பதிவு (13 அக்டோபர் 2015)

இரண்டு வருடங்கள் முன்பு எழுதியது. தற்சமயம் இங்கே கொலு கிடையாது. வீட்டம்மா தாயகத்தில் சில மாதங்களாக இருப்பதால், நான் மட்டும் தனிக்கட்டை. முக நூலிலும், வாட்ஸ் அப்பிலும், வகை வகையான கொலுவை பார்த்தபோது, மனது பழைய நினைவுகளில் மூழ்கிப்போனது.

சொல்லப்போனால், 2013 க்குப் பிறகு, போன வருடமும் விமர்சையாக கொலு வைக்க முடியாமல் போனது தனிக்கதை. 
இரண்டு வருடங்களில் வாழ்க்கை எவ்வளவு மாறிப்போய் விட்டது.

பொதுவாக, நிறைய நண்பர்களைச் சந்திப்பதே கொலு சமயத்தில்தான். இப்போது அதுவும் கிடைக்காது.

எத்தனையோ மாற்றங்களிலும், மாறாதது பாம்பே ஜெயஸ்ரீயின் அமிர்தவர்ஷினியான சங்கீதம் மட்டும்தான். அதுதான் என்னை இன்னமும் ‘மனிதனாக’ வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. சுய புராணம் போதுமென்று நினைக்கிறேன். மேலே படியுங்கள், முக்கியமாக அழகு கொஞ்சும் பாரதியாரின் பாட்டை, ஜெயஸ்ரீயின் இனிமையான குரலில் கேளுங்கள்.

இன்று (5 அக்டோபர் 2013) நவராத்ரிப் பண்டிகை ஆரம்பிக்கிறது. இரண்டு நாளாக, பரணிலிருந்து கொலு பொம்மைகளையெல்லாம் எடுத்து, கவனமாக பிரித்து, கொலு அடுக்குவதில் வீட்டம்மா ரொம்ப பிஸி. ஸ்லாடட் ஆங்கிளை, படியாக மாற்ற வேண்டியதும், வீட்டம்மா சொல்லும் தட்டுமுட்டு வேலைகளைச் செய்வது மாத்திரம் தான் என் பொறுப்பு. தவிர, நண்பர்களின் இல்லங்களுக்கு, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள சாரத்யம் செய்து, காரில் கூப்பிட்டுக்கொண்டு போக வேண்டியது கூடுதல் பொறுப்பு. பெண்களுக்கு மாத்திரமில்லை, நாங்களும் பல நண்பர்களைச் சந்திப்பது இந்த நவராத்திரி சமயம்தான். கொலு பொம்மை படமெல்லாம் அப்புறம் போடுகிறேன். உள்ளூர் நண்பர்கள் தவறாமல் கொலுவிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது முன்னழைப்பு. முறையான அழைப்பு, வீட்டம்மாவிடமிருந்து வரும்..

பதிவெழுதி சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த நவராத்ரி சமயத்தில் எதைப்பற்றி எழுதலாமென்று நினைத்துக்கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர், கர்னாடக சங்கீதத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிகமான ஆலாபனைகள் இல்லாமல், இனிமையான குரலில், எளிய பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள், கேட்கிறேன் என்றார். மணிக்கணக்காக கச்சேரி கேட்க பொறுமையில்லை, அந்த சங்கீதம் பற்றி ஞானமுமில்லை என்றார். நானும் கிட்டத்தட்ட அதே ரகம்தான். அதாவது, சங்கீதம் தெரியாது. ஆனால், மணிக்கணக்கில் கேட்கப்பிடிக்கும். ஆலாபனை, நிரவல், ராகம் தானம் பல்லவி (சங்கராபரணம் படத்து பாட்டு இல்லை), தனி ஆவர்த்தனம் எதுவானாலும் சரி. ராகம் காபியோ, காம்போதியோ எதுவானால் என்ன! கேட்க சுகம். 

அதற்காக ஞான சூன்யம் என்று தள்ளி விடாதீர்கள். நிறைய கேட்டுக்கேட்டு, சிலபல ராகங்கள் கண்டுபிடிக்கத்தெரியும். அடாணா மட்டும் 100% சரியாக கண்டுபிடிப்பேன். இந்தப் பதிவு என் கர்னாடக அறிவைப்பற்றியதில்லை.

இந்த நவராத்ரியின் போது ஒவ்வொரு நாளும்,  ஒரு எளிய பார்தியாரின் பாடலை அறிமுகம் செய்தாலென்ன என்று தோணிற்று. இது பாரதியின் புகைப்படம்.




பாரதியின் முறுக்கின மீசைக்கும், தீர்க்கமான பார்வைக்கும் பின்னால், அன்பும், பரிவும் இருக்கிறது. காதல் ரசம் ததும்பும் அவரது கண்ணன் பாட்டும், கண்ணம்மா பாட்டுமே அதற்கு சிறந்த உதாரணம். பிரிவாற்றாமையை இவ்வளவு அழகாகப்பாட முடியுமா?

அதுவும் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கண்ணனின் காதலியின் விரக தாபத்தைக் கேளுங்கள். பாட்டைக்கேட்டுக்கொண்டே, அந்த அழகான வரிகளைப் படிக்கலாம். கீழே வசதிக்காக பாரதியின் பாட்டையும் முழுக்க கொடுத்திருக்கிறேன்.






இன்னொரு செய்தி. பாரதியின் பாடலில் உள்ள சரணங்கள் மூன்று ஜெயஸ்ரீயின் பாடலில் விடுபட்டுள்ளது. நீளம் கருதி, ஜெயஸ்ரீ அந்த வரிகளை விட்டிருக்கலாம்.  பாரதி இந்த பாட்டிற்கு அமைத்த ராகம் செஞ்சுருட்டி. ஜெயஸ்ரீயும் அதே ராகத்தில்தான் பாடியிருக்கிறாரா என்று சங்கீதம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 கண்ணன் பாட்டு

10. கண்ணன்-என் காதலன்

                                 செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சம் துடித்ததடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்டதடீ!

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குணமுறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்து சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!


எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!


பாடல் தந்த இவர்களுக்கு நன்றி

பிரிவாற்றாமையை, தூண்டில் புழுவிற்கு ஒப்பிடுகிறார். யோசித்துப்பாருங்கள். என்ன அழகான உவமை. பிறகு கூண்டுக்கிளி. வைத்தியரும், ஜோசியரும் கூட கைவிட்டு விட்டார்கள் என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

இனி, பாம்பே ஜெயஸ்ரீ பற்றி.

பாரதியின் பாடல் முன்பே படித்ததுதான். ஆனால், அந்த வரிகளின் ஆழம், மன நிலை, ஏக்கம் இதையெல்லாம் நம் கண் முன்னே நிறுத்துவது பாம்பே ஜெயஸ்ரீயின் சுகமான சங்கீதம். அந்தக்குரல், அதில் இழையும் ஸ்வரங்கள். இரண்டு மூன்று தடவை கேட்டுப்பாருங்கள். 

காணி நிலம் வேண்டும் என்று பாடின பாரதி, ”பாட்டுக்கலந்திடவே அங்கோர் பத்தினிப் பெண் வேணும்” என்று பாடினார். பாரதி மட்டும் இந்தப் பாடலைக் கேட்டிருந்தால், எவ்வளவு மகிழ்ந்திருப்பார்.

பாரதியின் எல்லா பாடல்களையும் ஜெயஸ்ரீ பாடினால் எப்படி இருக்கும். நிச்சயமாக அதற்கு கடும் உழைப்பு தேவை. ஜெயஸ்ரீ மனது வைத்தால் முடியும். 

அதுவரைக்கும் அவர் பாடின பாரதி பாடல்களை தினமுன் இங்கே கேட்டு மகிழ்வோம். இதோ பாம்பே ஜெயஸ்ரீயின் புகைப்படம்
.

அன்புடன்
வெங்கட்



Wednesday 24 December 2014

One year has passed since...

December 25, An important festival day and millions of people around the world celebrate this day. No marks for guessing it! It is Christmas. But, December 25, 2013 has another significance for me and I am cherishing this day even after one year.

To keep the story short and avoid the danger of the reader closing this page, let me not keep the suspense. I met my favourite musician (under statement) Smt Bombay Jayashri on the Christmas day last year at her residence and expressed (blabbered!) my appreciation of her music. The chat for about half an hour plus but in the end it looked like few seconds.

Let me confess that I am not a critic or proficient in carnatic music (on any subject, to be frank!) but I can say that I love Carnatic music and right from AIR broadcasts, HMV LP records, tapes, CDs and now MP3 are feeding my music hunger over the 30 years. I want to write about my music journey (ah, listening journey) but that is for another day.

Bombay Jayashri's music was special to me. My language skills are so poor that I can't even give you a picture of my experience when I listened to her. I would describe her as a healer than a musician. I might have listened to her over 2500 hours in the past 3,4 years and I guess that I have every album of her in my possession. 

Last year after listening to her album on "Pancha bhutham" especially the bhairavi kriti "Chithaya maa ghandha moolam", I could not control my emotions and in fact cried silently for a long time. I must confess that I was going through lots of personal and emotional issues and looking back I don't know I am still sane and writing this.

Sorry, I got distracted again. I am not going to pour my personal issues here but when I was going through the rough patch, Smt Jayashri's music was like god send and kept listening to her during my walks and in the car (when alone) and my long commute to work has helped (!) me to listen to her more and more and not a day passed without listening to her for few minutes at the least.

My initial reaction to the carnatic music was to challenging myself to identify the raga and I used to be carrying a small diary to note the kritis under each raga sung in every concert. My bachelorhood at chennai was the golden years as I was able to hop from one sabha to another even on weekdays and enjoy lots of live classical music.

Again distracted. I have requested for an opportunity to meet her and if you recall last year during navaratri I had posted one posting every day with a bharathiyar song sung by Smt Jayashri. I have sent these blog posts to her and you can imagine that a busy musician like her would hardly have time to read emails from her fans. So, I used to get standard template emails from the moderator of her web site stating that "thank you for your email sir, we will inform Madam".

I never gave up and finally I was delighted to receive a personal note from her and it read: 

namaste
,
This is Bombay Jayashri here .

I express my gratitude to you for the emails you  have sent with sincerity .

Its truly gods grace and my gurus blessings .

December is a very hectic time but please do send an email once you are here and I am hopeful with gods grace its possible to meet you.

thank you ever so much ,for your patience.  

I was feeling top of the world but it wasn't easy even after I landed in Chennai as I did not have her contact numbers or address or personal email id. During busy December season, is she or her students are going to monitor emails from her fans on daily basis?

I listened to her kutcheri at Sri Krishna Gana sabha and managed to take a photo with her. Due to crowd and fans thronging to meet and get autograph from her, it was not possible to speak. I did not give up and sent few more emails referring to her initial email and on December 25th morning I saw her one liner email which read

On Tuesday, December 24, 2013 9:32 AM, Bombay Jayashri Ramnath <......> wrote:
namaste would tomorrow 11 am be convenient please

Although the email was sent on Dec 24th, I did not read it until 25th morning and I cancelled all my other work and rushed to meet her residence in Valmiki nagar. I was wonder struck at the surrounding and calmness of this place 


Finally my dream came true. I was too emotional and excited. I have expressed my experience of listening to her music and most of the time she would nod and say it's all God's grace and credit to my gurus. She was very humble and I have told my displeasure of her signing film music where some of the lines are not decent at all. She acknowledged and told that of late I am avoiding and many rasikas have expressed similar views, she continued.

I also pointed out her incorrect tamil pronunciation in one of her album wasn't correct although such an error was very very rare with Smt Jayashri. She thanked for bringing to her attention and wondered how the music director of that album missed this. I brought this to her attention not to criticize (which is obviously not possible! how a die hard fan of her would dare to do this) but to politely suggest to be careful in future.

Besides listening to her, I have read most of her articles where she used to remember her guru Sri Lalgudi sir and even I have requested her to sing the telugu lullaby that she referred in one of her article. I told that I can even record if she was ready to sing. She smiled and promised to sing it in the near future.

After some time, it was time to leave and she presented two of her lesser known albums with her autograph. I had taken a CD made with my favourite songs of her and when I told her that even my mother was her fan, she autographed as "With best regards" for my mother and her son was kind enough to take a picture of us.


Coming back to the present, I was about to miss the december season as I could not plan a trip to chennai originally. But to unexpected (testing times) turn of events, I am now going to be just landing on her Music Academy concert day and have requested one friend to get me a pass for her kutcheri and hopefully I get a chance to listen to her live. It's really long time since I had been to a live concert and looking forward to this.

Another interesting event happened last year. India Today (Tamil edition) interviewed few NRI rasikas and performers and carried an exclusive article about December season. My another favourite musician Smt Vidhya Subramanian have asked India Today team to contact me and the result was this article.
Overall, I had an wonderful music season last year and this year it is going to be very short and hopefully will get to sample some live carnatic music besides collecting few more albums.

I have been longing to write about my meetup with my healer musician but postponed it by just one year. I wanted to write in much more detail but afraid that it may never happen than..

Listen to Smt Jayashri's soul stirring bhairavi here (from the album of pancha butham and this song is about earth/land)



Hope you have enjoyed reading my brief (!) posting on Carnatic music. Lucky are the ones in Chennai during this Margazhi and so much happening in sabhas and temples where Andal's divine pouring (listen to MLV's renditions of thiruppavai) is being heard every where.

R Venkat

Thursday 17 October 2013

அர்ச்சனாவின் புற்று நோய் சிகிச்சை; தற்சமய நிலவரம் (17 அக்டோபர் 2013)

வணக்கம் நண்பர்களே,

அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.

அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.

இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.

மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.

அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.

அன்புடன் வெங்கட்

வணக்கம் நண்பர்களே,

அண்மைக்காலமாக, அர்ச்சனாவின் உடல் நிலை பற்றி இங்கே எழுதவில்லையே தவிர, அவரது தந்தையாரிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தேன். நேற்று, மூன்றாவது கீமோதெரபி முடிந்து, வீடு திரும்பியிருக்கிறார்கள். அடுத்த சிகிச்சை நவம்பர் நாலாம் தேதி. மெடிகல் ரிப்போர்ட் மற்றும் செலவுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளார்கள். அவை உங்கள் பார்வைக்கு.

Archana's prescription (16 Oct 2013)


Medical report page 2


Medical report 16 Oct 2013


Expense vouchers( Clinic bill)


Misc expenses like transport, food etc

Pharmacy bill  

என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தாராளமாக நிதியுதவி அளித்தமைக்கு மிகவும் நன்றி. அர்ச்சனாவின் குடும்பத்தினர், தங்களது நன்றியை தெரிவிக்கச் சொன்னார்கள். இப்போதைக்கு ஆறு கீமோதெரபிக்கான தொகை சேர்ந்துவிட்டது. அதற்குப்பிறகு என்ன சிகிச்சை என்று இன்னமும் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும், அர்ச்சனா உடல் நலம் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்தியுங்கள். இருபத்தாறு வயதில், மூணு மாதக் குழந்தையுள்ள இளம் தாய்க்கு புற்று நோய் என்பது மிகக் கொடூரமானது.

மேற்படி தகவல்கள் கிடைத்தால், இங்கே பதிவிடுகிறேன்.

அன்புடன்
வெங்கட்
17 அக்டோபர் 2013


Monday 14 October 2013

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே (எடுத்த)
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டினேனுக்கு அருளினள் காளி; (விடுத்த)
தடுத்து  நிற்பது  தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து  மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணும் ஆருயிரும் என நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில் லாவோ?
விண்ணு ளோர் பணிந் தேவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்களென்பார்க்கே.


ஒன்பது இரவுகள், பத்து பதிவுகள்.

இந்த விஜயதசமி நாள் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

என்னவொரு பாட்டு, தன்னம்பிக்கையை தட்டியெழுப்பும் பாட்டு. தடுத்து நிற்பது தெய்வதமேனும் அதைக் காளி படுத்து மாய்ப்பளென்று மார் தட்டுகிறார்.

இந்தப்பாடல் ஜெயஸ்ரீ பாடவில்லை (அப்பாடா, அவர் பெயரை ஒரு தடவையாவது எழுதியாயிற்று). பாடியவர் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். சரியாக கண்டுபிடிப்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.




அன்புடன் வெங்கட்
14 அக்டோபர் 2013

Sunday 13 October 2013

சரஸ்வதி பூஜை; நவராத்ரி நிறைவு நாள் (ஒன்பதாம் நாள்). பாரதி பாடல்கள், ஜெயஸ்ரீ குரலில்


பதிவுலக, முக நூல் நண்பர்களுக்கு வணக்கம். இன்று சரஸ்வதி பூஜை. ஒன்பது நாட்களாக, பாரதியின் பாடல்களை, பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுப்பதில் சிரமமொன்றுமிருக்கவில்லை. நீங்களும் ஊகித்திருப்பீர்கள்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர்  உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின்  உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மே வடி வாகிடப் பெற்றாள்.                                               (வெள்ளைத்)

இந்தப் பாடல் மிக நீளமானது. ஜெயஸ்ரீ முதலிரண்டு சரணங்கள் தான் பாடியிருக்கிறார். அதனால், நீளம் கருதி நானும் மற்ற சரணங்களை விட்டுவிட்டேன்.

சரஸ்வதி வாழுமிடங்களாக பலவற்றைக் குறிப்பிடுகிறார். வெள்ளைத்தாமரை, வீணையின் ஒலி, பாவலரின் நெஞ்சம், வேதத்தின் உட்பொருள், கள்ளமற்ற முனிவரின் கருணை வாசகம் என்று அவரது கற்பனை விரிகிறது.

ஒன்று கவனித்தீர்களா! கலைமகள், சங்கீதத்தில் இருப்பாள் என்று சொல்லவில்லை. மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் என்கிறார், குறிப்பாகப் பாடுகிறார். அந்த மாதர் வேறு யாருமில்லை. நம் ஜெயஸ்ரீதான்.



ஒன்பது நாளும், பொறுமையாக என் பதிவுகளைப் படித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி. கர்னாடக சங்கீதத்தை எளிமையான முறையில் அறிமுகம் செய்யச்சொன்ன நண்பருக்கு ப்ரத்யேக நன்றி. பள்ளி நாட்களில் ரசித்த பாரதியின் பாடல்களை மீண்டுமொரு முறை படிக்கவும், தட்டச்சவும், இந்த சாக்கில் ஜெயஸ்ரீயின் பாட்டை மீண்டும் பல தடவை கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது.

மறக்க முடியாத நவராத்ரி. எனக்கே எப்போதாவது இந்தப் பாட்டைக் கேட்கவேண்டுமானால், எளிதாக ஒரே இடத்தில் கேட்டுவிடலாம்.

விடை பெறுவதற்குமுன்,

நாளை விஜயதசமி, அதற்கு பொருத்தமான ஒரு பாடலோடு இந்த தொடரை முடிக்கலாமென்று எண்ணம். அந்த பாட்டின் வரிகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்
13 அக்டோபர் 2013

Thursday 10 October 2013

நவராத்ரி பதிவுகள்; எட்டாம் நாள்; பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

வணக்கம் நண்பர்களே,

நவராத்ரியில் பாரதியின் பாடல்கள், பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொடர்கிறது. இன்று கண்ணன் பாட்டு. கோபி, கண்ணனைக்கண்டு வர தோழியைத் தூது விடுகிறாள். கண்ணன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துவரச் சொல்கிறாள். இந்தப் பாடலில் ச்ருங்கார ரசத்துடன், ரௌத்ர ரசமும் இருக்கிறது.

பாடலின் ஆரம்பத்தில், கண்ணனின் எண்ணம்தான் என்னவென்று தெரிந்து கொண்டுவிட்டால், தோழிக்கு எது வேண்டுமானாலும் செய்வேனென்று சொல்கிறாள். ஆனால், சிறிது நேரத்தில், கோபம் வந்து, கண்ணன் ஆற்றங்கரையில் தனியிடத்தில் பேசியதையெல்லாம், தூற்றி முரசு சாற்றுவேனென்று சொல்லச் சொல்கிறாள். அப்பப்பா என்ன கோபம்! அடுத்த சரணத்திலும் (ஜெயஸ்ரீ இந்த சரணம் பாடவில்லை), இடைச்சிப் பெண்களிடம் காட்டுகிற சூழ்ச்சித்திறமை எல்லாம், வீர குல மாதரிடத்தில் வேண்டியதில்லையென்று சொல்லச் சொல்கிறாள்.

கோபம் தணிந்து, கடைசியில் கண்ணனையே எண்ணி மனம் மறுகிறது, அதனால் ஒரு சொல் கேட்டுவா என்று முத்தாய்ப்பு வைக்கிறாள்.

ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக படம் பிடித்துக்காட்டும் பாட்டு. முதலில் பாட்டைப் படியுங்கள்.


கண்ணன்-என் காதலன்

பாங்கியைத் தூது விடுத்தல்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்-அடி
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் (கண்ணன்)

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். (எண்ணம்)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்; (கன்னிகை)

அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் (கண்ணன்)

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவ னென்றே
சொல்லி  வருவையடி  தங்கமே தங்கம். (கண்ணன்)

சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து  மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம். (கண்ணன்)




வழக்கம் போல ஜெயஸ்ரீ அசத்துகிறார். ஆனாலும் கண்ணன் மீது கோபமாய்ச் சொல்லும் சரணங்களில் கோப ரசம் தனியாகத் தெரியவில்லை. ஏக்க பாவனைதான் தொனிக்கிறது. ஜெயஸ்ரீயின் பா4வம் அப்படி. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பொருள் பொதிந்த பாடல் வரிகளும், கவிஞனின் மன நிலையை சங்கீத்தில் கொண்டு வரும் திறன் படைத்த பாடகியும் சேர்ந்துவிட்டால், ரசிகனின் ஆனந்ததிற்கு எல்லையுண்டோ!


நாளை சரஸ்வதி பூஜை. இன்னொரு பொருத்தமான பாட்டுடன் சந்திக்கிறேன்.

அன்புடன் வெங்கட்
12 அக்டோபர் 2013